பேரறிவாளனை விடுவிப்பதில் தங்களது குடும்பத்திற்கு ஆட்சேபனை இல்லை ராகுல்காந்தி கூறியதாக பா.ரஞ்சித் தகவல்

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இயக்குநர் பா.ரஞ்சித் சந்தித்து பேசினார் அப்போது பேரறிவாளனை விடுவிப்பதில் தங்களது குடும்பத்திற்கு ஆட்சேபனை இல்லை என அவர் கூறியதாக பா.ரஞ்சித் கூறி உள்ளார். #Raghulganthi #Perarivalan #Ranjith

Update: 2018-07-11 06:15 GMT
புதுடெல்லி

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசனை சந்தித்து பேசி உள்ளார். இது குறித்து அவர தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

மெட்ராஸ், கபாலி, காலா போன்ற பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய இயக்குநர் பா.ரஞ்சித்தை நேற்று டெல்லியில் சந்தித்தேன். அவருடன் நடிகர் கலையரசனையும் சந்தித்தேன். அரசியல், சினிமா மற்றும் சமுதாயம் தொடர்பாக இருவரும் விவாதித்தேன். அவர்களுடன் உரையாடியது மகிழ்ச்சியளிக்கிறது என கூறி உள்ளார்.

ராகுல காந்தி - பா.ரஞ்சித்துக்கும் இடையேயான சந்திப்பு 2 மணி நேரம் நீடித்தது. அப்போது ராகுல்காந்தியிடம் பேரறிவாளனை மீட்க உதவ வேண்டும் என இயக்குனர்  பா.ரஞ்சித் கோரிக்கை வைத்ததாகவும்  பேரறிவாளனை விடுவிப்பதில் தங்களது குடும்பத்திற்கு ஆட்சேபனை இல்லை  என  ராகுல்காந்தி கூறியதாக பா.ரஞ்சித் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கூறி உள்ளார் . 

மேலும் செய்திகள்