பிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா தூக்குபோட்டு தற்கொலை
சென்னையில் பிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா இன்று அவரது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை
பிரபல தனியார் தொலைக்காட்சிகள் மற்றும் தமிழ் தொடர்களில் நடித்து வந்தவர் நடிகை பிரியங்கா. இவர் வளசரவாக்கத்தில் வசித்து வந்தார். குடும்ப பிரச்சனை காரணமாக அவர் இன்று தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கணவன், மனைவியிடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் விசாரணையில், 32 வயதான பிரியங்காவுக்கு குழுந்தை இல்லாததால் குடும்பாத்தாருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவும் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மனஅழுத்தம், குடும்ப பிரச்சனை காரணமாக டிவி நடிகர்-நடிகைகள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. நடிகை சபர்ணா, நடிகர் முரளி மோகன், நடிகை சோபனா, நடிகர் சாய் பிரசாந்த் ஆகியோரும் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.