நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் சுற்றும் புதிய படம் வெளியானது

சமூக வலைத்தளத்தில் வெளியான நயன்தாரா -விக்னேஷ்சிவனின் நெருக்கமான புதியபடம் வெளியாகியுள்ளது. இதனால் நயன்தாராவுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Update: 2018-08-08 20:45 GMT

நயன்தாராவுக்கு 33 வயது ஆகிறது. 2005-ல் ஐயா படத்தில் அறிமுகமாகி இப்போதுவரை முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். தெலுங்கிலும் இவர் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. 2 மொழி படங்களிலும் பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் தற்போது நடிக்கிறார்.

இவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் சம்பளத்தை ரூ.4 கோடியாக உயர்த்தி இருப்பதாக தகவல். வேறு எந்த தென்னிந்திய நடிகையும் இவ்வளவு அதிக சம்பளம் வாங்கியது இல்லை. அதோடு டைரக்டர் விக்னேஷ் சிவனின் காதல் வலையிலும் சிக்கி இருக்கிறார். இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறந்து ஜோடியாக சுற்றி வருகிறார்கள்.

அந்த படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். இருவருமே காதலை இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆனாலும் நெருக்கமான படங்கள் மூலம் காதலை உறுதிப்படுத்தி வருகின்றனர். விரைவில் விக்னேஷ் சிவனை கதாநாயகனாக வைத்து நயன்தாரா சொந்த படம் தயாரிக்கப்போவதாகவும் இதற்காக அவர் கதை கேட்டு வருவதாகவும் கிசுகிசுக்கின்றனர்.

இந்த நிலையில் நயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புதிய படத்தை விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு “இந்த காதலில் அதிகமான நட்பு உள்ளது. நட்பிலும் அளவுக்கு அதிகமான காதல் உள்ளது” என்று பதிவிட்டு இருக்கிறார். திருமணம் செய்து கொள்ளாமல் விக்னேஷ் சிவனுடன் சுற்றுவது நயன்தாராவின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை என்றும், அவரது திருமணத்தை விரைவில் நடத்தி முடிக்க தீவிரம் காட்டுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்