`வீராபுரம்' மணல் கொள்ளையை மையமாக கொண்ட படம்

மணல் கொள்ளை பற்றிய உண்மை சம்பவம் வீராபுரம் படமாகிறது.

Update: 2018-08-09 22:00 GMT
மணல் கொள்ளையை மையமாக கொண்டு உண்மை சம்பவத்தின் அடிப்படையில், ஒரு புதிய படம் தயாராகி இருக்கிறது. அந்த படத்தின் பெயர், `வீராபுரம்.' இதில், `அங்காடித்தெரு' புகழ் மகேஷ், `உறுதிகொள்' பட புகழ் மேகனா ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக நடித்து இருக்கிறார்கள்.

``இந்த படத்தில், ஒரு சமுதாய பிரச்சினையும் சொல்லப்படுகிறது. சென்னை, மதுரை, செங்கல்பட்டு ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது.

குணசேகரன் தயாரிக்க, சுந்தர்ராஜன், கன்னியப்பன் இணை தயாரிப்பில், செந்தில்குமார் டைரக்டு செய்திருக்கும் படம், இது.

மேலும் செய்திகள்