கேரள மக்களுக்கு நடிகர்கள் ராகவா லாரன்ஸ்- அமிதாபச்சன் நிதி உதவி
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நடிகர்கள் ராகவா லாரன்ஸ்- அமிதாபச்சன் நிதி உதவி வழங்கி உள்ளனர். #KeralaFloods2018 #AmitabhBachchan #RaghavaLawrence
சென்னை
வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு பல்வேறு நடிகர்கள், நடிகைகள் நிவாரண உதவி செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ரூ. 1 கோடியை பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு வழங்கவுள்ளார். இது குறித்து டுவிட்டரில் லாரன்ஸ் பதிவிட்டுள்ளார். வரும் சனிக்கிழமை கேரள முதல்வரை சந்தித்து நிதியை அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Hi Friends and Fans..! I have decided to contribute “1 crore to Kerala”.. pic.twitter.com/GQjQU1MfOD
— Raghava Lawrence (@offl_Lawrence) August 23, 2018