பொங்கல் பண்டிகையில் ரஜினி–அஜித் படங்கள் மோதல்

ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட மற்றும் அஜித்குமாரின் விஸ்வாசம் படங்களை பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.

Update: 2018-09-26 23:30 GMT
இரு படங்களின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடக்கிறது. விஸ்வாசம் படத்தை தீபாவளிக்கு வெளியிட முதலில் திட்டமிட்டனர். படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டதால் பொங்கலுக்கு தள்ளிப்போகிறது. 

ரஜினிகாந்த் நடித்துள்ள எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 நவம்பரில் திரைக்கு வருகிறது. பேட்ட, விஸ்வாசம் படங்கள் ஒன்றாக மோத இருப்பதால் ரஜினி, அஜித் ரசிகர்களால் பொங்கல் பண்டிகைகளை கட்டும் என்கின்றனர். பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, திரிஷா, சிம்ரன் ஆகியோர் நடிக்கின்றனர். 

கார்த்தி சுப்புராஜ் இயக்குகிறார். இது அதிரடி படமாக உருவாகிறது. ரஜினிகாந்த் கல்லூரி விடுதி வார்டனாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது. இப்போது அவருக்கு ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி வேடம் என்கின்றனர். இறுதிகட்ட படப்பிடிப்பு லக்னோவில் தற்போது நடந்து வருகிறது. அடுத்தமாதம் இறுதியில் படப்பிடிப்பு முடிகிறது. 

விஸ்வாசம் படத்தில் அஜித்குமார் இரு வேடங்களில் நடிக்கிறார். ஒரு கதாபாத்திரத்துக்கு தூக்கு துரை என்று பெயர் வைத்து இருப்பதாக தகவல். தாதா கதையம்சம் உள்ள படம். இதில் கதாநாயகியாக நயன்தாரா வருகிறார். சிவா இயக்குகிறார். அஜித்குமாரின் முதல் தோற்ற படங்கள் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் ‘‘எத்தன உயரம் இமயமல. அதில் இன்னொரு சிகரம் எங்க தல’’ என்ற பாடல் இடம்பெறுகிறது. இது படத்தின் அறிமுக பாடலாக இருக்கலாம் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்