அறிவுரை சொன்ன டைரக்டர்!
“வளர்ந்து வரும் நடிகரோ, நடிகையோ யாராக இருந்தாலும் சரி, முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் போது வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
பணமும், புகழும் கண்ணை மறைக்கும். காதுகளை செவிடாக்கும். நடிப்பதுதான் நடிப்பு...பேசுவதுதான் வசனம்...என்ற நிலைக்கு வந்து விட்டால், விழித்துக் கொள்ள வேண்டும்.
அப்படி ஒரு நிலை உனக்கு வந்து இருக்கிறது. ஜாக்கிரதையாக இரு” என்று ஒரு நடிகருக்கு அவரை அறிமுகம் செய்த டைரக்டர் அறிவுரை சொல்லியிருக்கிறார்.
டைரக்டரின் அறிவுரையை அந்த நடிகர் காற்றோடு பறக்க விடுவாரா அல்லது கவனத்தில் வைத்திருப்பாரா? போகப்போக தெரியும்!