கூத்துப்பட்டறையில் பயிற்சி!

மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய இருவரிடமும் உதவி டைரக்டராக இருந்தவர் சர்ஜுன் கே.எம்.

Update: 2018-09-08 22:45 GMT
சர்ஜுன் கே.எம். இயக்கி, சமீபத்தில் வெளியான படம், `எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்.' அதில், தாமஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர், விவேக் ராஜ்கோபால். இவரும், கிஷோரும் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தார்கள். சினிமாவுக்கு வந்தது எப்படி? என்பது பற்றி விவேக் ராஜ்கோபால் சொல்கிறார்:-

``நான், சென்னைவாசிதான். ரஜினிகாந்தின் `ஆஸ்ரம்' பள்ளியில் படித்தேன். கல்லூரி படிப்பை லயோலாவில் முடித்தேன். என்னை சினிமா ஆசை விடாமல் துரத்தியது. கூத்துப்பட்டறையில் சேர்ந்து நடிப்பு பயிற்சி பெற்றேன்.

நான் கதாநாயகனாக வர விரும்பவில்லை. நல்லதோ, கெட்டதோ எப்படிப்பட்ட கதாபாத்திரத்திலும் நடிக்க விரும்புகிறேன். என் கதாபாத்திரம் பேசப் படணும். அது போதும்'' என்கிறார், விவேக் ராஜ்கோபால்! 

மேலும் செய்திகள்