இடைத்தேர்தலை சந்திக்க தயங்கவில்லை ; மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

இடைத்தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யத்துக்கு தயக்கம் இல்லை என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-30 11:49 GMT
சென்னை,

சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த  மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது:-

 திருவள்ளூர் மாவட்டத்தில் தங்கள் கட்சி தத்தெடுத்துள்ள அதிகத்தூர் கிராமத்தில் 100 கழிவறைகள் கட்டும் பணிகள், அரசின் அனுமதி கிடைத்ததும் தொடங்கப்படும்.

மத்தியில் பாஜக அரசுக்கு பாடம் புகட்ட வேண்டுமென்று திமுக தலைவர் பேசியிருப்பது குறித்த கேள்விக்கு, அது அவரது கருத்து என்று கமல்ஹாசன் குறிப்பிட்டார். மேலும், கலைஞர் புகழஞ்சலி கூட்டத்துக்கு அழைப்பு வந்திருப்பதாகவும், ஆனால், தாம் அதில் பங்கேற்கவில்லை . இடைத்தேர்தலை சந்திக்க மக்கள் நீதி மய்யம் தயங்கவில்லை என கூறினார்.

மேலும் செய்திகள்