தக்காளி விலை கடும் வீழ்ச்சி: சாலையோரம் கொட்டி செல்லும் விவசாயிகள்

அரூர் பகுதியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சியின் காரணமாக விவசாயிகள் சாலையோரம் கொட்டி செல்கிறார்கள்.

Update: 2018-09-04 22:15 GMT
அரூர், 

தர்மபுரி மாவட்டம் அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். இந்தாண்டு தக்காளி விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் தோட்டத்தில் இருந்து அறுவடை செய்யும் தக்காளியை விவசாயிகள் மார்க்கெட் மற்றும் வாரச்சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். வரத்து அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.6-க்கு விற்பனை செய்யப்படுகிறது. போதிய விலை கிடைக்காததால் கவலை அடைந்த விவசாயிகள் தக்காளியை சாலையோரங்களில் ஆங்காங்கே கொட்டி செல்கின்றனர்.

மேலும் விலை வீழ்ச்சியால் சிலர் தோட்டத்திலேயே தக்காளியை பறிக்காமல் விட்டு விடுகின்றனர். விலை வீழ்ச்சியை தவிர்க்க அரூர் பகுதியில் தக்காளி குளிர்பதன கிடங்குகளை அரசு அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்