கூத்தாநல்லூர் அருகே அண்ணன்-தம்பி மீது தாக்குதல் 2 பேர் கைது

கூத்தாநல்லூர் அருகே அண்ணன்-தம்பியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-04 22:30 GMT
கூத்தாநல்லூர்,

கூத்தாநல்லூர் அருகே உள்ள கள்ளவாழாச்சேரியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது28). விவசாயி. சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த ரவி (48) என்பவருடைய வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் ஆடு ஒன்று சக்திவேலுக்கு சொந்தமான வயலில் மேய்ந்துள்ளது. இதனால் சக்திவேல் மற்றும் அவருடைய தம்பி விஜயகுமார்(26) ஆகிய இருவரும் சேர்ந்து ரவியை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ரவி, அவருடைய தம்பி சங்கர் (46), ரவியின் மகன் டேவிட் ஆகிய 3 பேரும் சேர்ந்து சக்திவேல், விஜயகுமார் ஆகிய 2 பேரையும் உருட்டு கட்டையால் தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த சக்திவேல் மன்னார்குடி அரசு மருத்துவமனையிலும், விஜயகுமார் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீசில் சக்திவேல் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரவி, அவருடைய தம்பி சங்கர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக ரவியின் மகன் டேவிட்டை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்