ரெயிலில் அடிபட்டு டிரைவர் சாவு - போலீசார் விசாரணை

மோகனூர் அருகே ரெயிலில் அடிபட்டு டிரைவர் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-09-08 23:15 GMT
மோகனூர்,

நாமக்கல் மாவட்டம் காவேட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 28). கார் டிரைவர். இந்த நிலையில் நேற்று மோகனூர் அருகே லத்துவாடி பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் ரெயிலில் அடிபட்டு உடல் சிதைந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி பிணமாக கிடந்தார். இதைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அவர்கள் இது தொடர்பாக மோகனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், இது குறித்து சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர அவர்கள் கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த கிருஷ்ணமூர்த்திக்கு மனைவியும், 3 மாதத்தில் ஒரு குழந்தையும் உள்ளனர்.

மேலும் செய்திகள்