மசாஜ் பார்லரில் விபசாரம் : வெளிநாட்டு பெண்கள் உள்பட 5 பேர் மீட்பு

புனே கோண்ட்வா பகுதியில் அமைந்துள்ள கட்டிடத்தில் உள்ள மசாஜ் பார்லரில் விபசாரம் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

Update: 2018-09-08 23:23 GMT
புனே,

போலீசார் போலி வாடிக்கையாளர் ஒருவரை அங்கு அனுப்பி சோதனை செய்தனர். இதில் அந்த மசாஜ் பார்லரில் விபசாரம் நடப்பது உறுதியானது.

இதை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தி அங்கிருந்த 3 வெளிநாட்டு பெண்கள் உள்பட 5 இளம்பெண்களை மீட்டனர்.

மேலும் மசாஜ் பார்லர் உரிமையாளர், ஏஜெண்ட் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்