மனைவியை கத்தியால் வெட்டிய தொழிலாளி கைது

பெண்ணாடத்தில் மனைவியை கத்தியால் வெட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2018-09-10 21:30 GMT

பெண்ணாடம், 

பெண்ணாடம் சோழன்நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 37). தொழிலாளி. இவருடைய மனைவி செந்தமிழ் (26). பாலமுருகன் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று பாலமுருகன் மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த செந்தமிழ், ஏன் மதுகுடிக்கிறீர்கள் என கேட்டு பாலமுருகனை கண்டித்துள்ளார். இதில் அவர்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டது. அப்போது கோபமடைந்த பாலமுருகன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து செந்தமிழ் தலையில் வெட்டி, அவரை ஆபாசமாக திட்டியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த செந்தமிழ் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது.

இது தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்