நெல்லை சந்திப்பில் மோட்டார் சைக்கிள்- வாகனம் மோதல்; முதியவர் பலி வாலிபர் பலத்த காயம்

நெல்லை சந்திப்பில் மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் முதியவர் பலியானார்.

Update: 2018-09-11 22:30 GMT
நெல்லை, 

நெல்லை சந்திப்பில் மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் முதியவர் பலியானார். வாலிபர் பலத்த காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து

நெல்லை பேட்டை சத்யா நகரை சேர்ந்தவர் தாஸ் பாண்டி (வயது 60). இவருடைய உறவினர் பேட்டை சத்யா நகரை சேர்ந்த கணபதி மகன் மாரி பாண்டி (22). கட்டிட தொழிலாளி. இவர்கள் 2 பேரும் நேற்று பாளையங்கோட்டையில் இருந்து பேட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் மேல்பகுதியில் சென்று கொண்டிருந்த போது மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் இவர்கள் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

முதியவர் பலி

இதில் தூக்கி வீசப்பட்ட தாஸ் பாண்டி மற்றும் மாரி பாண்டி இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அந்த 2பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே தாஸ் பாண்டி பரிதாபமாக இறந்தார். மாரி பாண்டி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்