விவசாயிகள் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகையில், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
நாகப்பட்டினம்,
டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய பா.ஜ.க., அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டியும், மத்திய அரசை கண்டித்தும் நாகை புதிய பஸ் நிலையம் அருகே காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் தனபாலன் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது கழுத்தில் தூக்கு கயிற்றை சுற்றி கொண்டு, ஒரு பக்கம் பிரதமர் மோடியும், மறுமுனையில் மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதானுமும் கயிரை இறுக்குவது போல் நடித்து காட்டினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற் பட்டது.