தேளூர் திறன் மின்மாற்றியில் 3 நாட்கள் பராமரிப்பு பணிகள்; இன்று தொடங்குகிறது

அரியலூர் கோட்டம் மற்றும் உப கோட்டத்திற்கு உட்பட்ட தேளூர் துணை மின் நிலையத்தில் உள்ள திறன் மின்மாற்றி எண் 1-ல் சிறப்பு பராமரிப்பு பணிகள் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் வரை நடைபெறுகிறது.

Update: 2019-02-12 22:30 GMT
அரியலூர்,

அரியலூர் கோட்டம் மற்றும் உப கோட்டத்திற்கு உட்பட்ட தேளூர் துணை மின் நிலையத்தில் உள்ள திறன் மின்மாற்றி எண் 1-ல் சிறப்பு பராமரிப்பு பணிகள் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் வரை நடைபெறுகிறது. இந்த துணை மின் நிலையத்தின் பெரிய திருக்கோணம் மின்பாதையில் இருந்து மின்சாரம் பெறும் வாழைக்குழி, சுண்டக்குடி, ஆண்டிப்பட்டாக்காடு, சிலுப்பனூர், ஓரியூர், ஓட்டக்கோவில் பகுதிகள், கீழப்பழூர் துணை மின்நிலைய கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட மின்பாதைக்கு மாற்றம் செய்யப்படவுள்ளது. விளாங்குடி மின்பாதையில் உள்ள நாச்சியார்பேட்டை, மணகெதி, ஆதிச்சனூர் ஆகிய பகுதிகள் உடையார்பாளையம் துணை மின் நிலையம் த.மேலூர் மின்பாதைக்கும் மற்றும் தேளூர் மின்பாதையில் உள்ள தேளூர் மற்றும் குடிசல் பகுதிகள் அரியலூர் துணை மின்நிலையம் அஸ்தினாபுரம் மின்பாதைக்கும் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதனால் இருமுனை மற்றும் மும்முனை மின்சாரம் வழங்குவதில் மாற்றம் ஏற்படும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த தகவலை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தேளூர் உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்