வானவில் : பூச்சிக்கடியிலிருந்து காப்பாற்றும் சாதனம்

கொசுக்கள் மற்றும் பூச்சிகள் கடித்தால் அந்த இடத்தில் அரிப்பும் தடிப்பும் ஏற்பட்டு பாடாய்ப்படுத்தும். அதுவும் இரவு நேரங்களில் கொசுக்கடியால் தூக்கமே போய்விடும்.

Update: 2019-02-20 13:20 GMT
பைட் ஹெல்பர் என்னும் இந்த சாதனம் இந்த தொல்லையிலிருந்து நம்மை விடுவிக்கும். சிறிய சைஸ் பேனாவை போலிருக்கும் இது பூச்சிக்கடியால் ஏற்படும் நமைச்சலை போக்கி நோய்க் கிருமிகள் ஏதும் பரவாமல் காக்கிறது.

‘தெர்மோ பல்ஸ்’ எனப்படும் தொழில்நுட்பத்தில் இது இயங்குகிறது. இதில் இருக்கும் மெட்டல் முனையை பூச்சி கடித்த இடத்தில் வைத்தால் போதும். அம்முனையிலிருந்து வெளிவரும் வெப்பம் மற்றும் அதிர்வலைகள் பாதிக்கப்பட்ட இடத்தை நடுநிலைப்படுத்தி ( NEUTRALIZE ) ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.சில நொடிகளிலேயே அரிப்பு நின்று விடுகிறது.

பூச்சிக்கொல்லிகளும், ஸ்ப்ரேக்களும் இருந்தாலும் அவை கேடு விளைவிக்கும் ரசாயனங்களை கொண்டுள்ளதால் அவற்றை உபயோகிப்பது நல்லதல்ல. டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் இந்த பைட் ஹெல்பர் சாதனம் வரவேற்கத்தக்கது. ஐந்து வயது குழந்தையிலிருந்து பெரியவர் வரை எல்லா வயதினரும் இதை உபயோகிக்கலாம். இக்கருவி பேட்டரியில் இயங்கக்கூடியது. இதன் விலை ரூ.1,420.

மேலும் செய்திகள்