திருவாரூரில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் பலி லாரி மோதியது

திருவாரூரில் லாரி மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் பலியானார்.

Update: 2019-02-20 22:15 GMT
திருவாரூர்,

திருவாரூர் விளமல் கூட்டுறவு நகரை சேர்ந்தவர் செல்வராஜன் (வயது 65). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் தஞ்சை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த செல்வராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து செல்வராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து செல்வராஜன் மகன் விஜய் திருவாரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதநேரு மற்றும் போலீசார், லாரி டிரைவர் அலிவலம் பகுதியை சேர்ந்த கருணாகரன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்