பொள்ளாச்சி பாலியல் வன்முறையை கண்டித்து பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவத்தை கண்டித்து பல்வேறு அமைப்புகள், கட்சிகள் சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2019-03-16 22:45 GMT
மலைக்கோட்டை,

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவத்தை கண்டித்து பல்வேறு அமைப்புகள், கட்சிகள் சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் ஷாகுல் தலைமை தாங்கினார். இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் பெரியார் சரவணன், மாவட்ட செயலாளர் ராயல்ராஜா, தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள் கமலகண்ணன், வின்சென்ட் ஜெயராஜ், வக்கீல் கென்னடி, திராவிடர் விடுதலை கழக நிர்வாகி புதியவன் மற்றும் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் நல சங்கத்தினர் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, பொள்ளாச்சி பாலியல் வன்முறை விவகாரத்தில் கைதானவர்களை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. 

மேலும் செய்திகள்