திண்டிவனத்தில், ரெயில்வே ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

திண்டிவனத்தில் ரெயில்வே ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2019-05-04 04:45 IST
திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டை முதல் தெருவை சேர்ந்தவர் கங்காதரன். இவரது மகன் அசோக்குமார் (வயது 29). இவர் தாம்பரம் ரெயில் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களாக அசோக்குமார் உடல்நிலை பாதிப்பால் அவதியடைந்து வந்தார்.

இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மருத்துவ விடுப்பில் சொந்த ஊருக்கு வந்த அசோக்குமார், பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றார். இருப்பினும் அவர் குணமாகவில்லை என தெரிகிறது.

இதனால் மனவேதனை அடைந்த அசோக்குமார் நேற்று முன்தினம் இரவு வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தற்கொலை செய்து கொண்ட அசோக்குமார் உடலை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

மேலும் செய்திகள்