பாலியல் தொல்லை வழக்கில் தீர்ப்புக்கு பயந்து தொழிலாளி தற்கொலை

கல்லாவி அருகே பாலியல் தொல்லை வழக்கில் தீர்ப்புக்கு பயந்து தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2019-08-04 03:45 IST
கல்லாவி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே உள்ள சாலமரத்துப்பட்டி காலனியை சேர்ந்தவர் முருகன் (வயது 48). கூலித்தொழிலாளி. இவர் மீது கல்லாவி போலீசார் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் செய்ததாக போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

அந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. அந்த வழக்கில் தீர்ப்பு கூறப்படுவதாக இருந்தது.

இந்த நிலையில் தீர்ப்புக்கு பயந்து, முருகன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் கல்லாவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் இறந்த முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்