துணை தாசில்தார் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
துணை தாசில்தார் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 இடங்களில் வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் துணை தாசில்தார் காலிப்பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் பணிகள் பாதிக்கப்படுவதோடு, கூடுதல் பொறுப்புகளை கவனிப்போருக்கு பணிச்சுமை ஏற்படுகிறது. இந்நிலையில் ஐகோர்ட்டு மதுரை கிளையின் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள 40-க்கும் மேற்பட்ட துணை தாசில்தார் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில், புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இதற்கு வட்ட தலைவர் தீபக் தலைமை தாங்கினார். இதில் வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு துணை தாசில்தார் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதேபோல புதுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு வட்ட தலைவர் வித்யா தலைமை தாங்கினார்.
தாலுகா அலுவலகங்களில் போராட்டம்
இதேபோல ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு தனி தாசில்தார் யோகேஸ்வரன் தலைமையிலும், அறந்தாங்கி தாலுகா அலுவலகத்தில் வருவாய் முதுநிலை அலுவலர் செந்தில்குமார் தலைமையிலும் நடைபெற்றது.மணமேல்குடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு வட்ட தலைவர் முத்துகனி தலைமையிலும், ஆவுடையார்கோவில் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஜெயபாரதி தலைமையிலும், திருமயம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலும் நடைபெற்றது.
பணிகள் பாதிப்பு
கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு தாசில்தார் வில்லியம்மோசஸ் தலைமையிலும், விராலிமலை தாலுகா அலுவலகத்தில் கொடும்பாளூர் வருவாய் ஆய்வாளர் பாண்டி தலைமையிலும், இலுப்பூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் திருமலை தலைமையிலும், கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கலைமணி தலைமையிலும் நடைபெற்றது.
குளத்தூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு வட்ட தலைவர் அருண்குமார் தலைமை தாங்கினார். பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு வட்ட தலைவர் துரை தலைமை தாங்கினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 தாசில்தார் அலுவலகங்கள் உள்பட 13 இடங்களில் வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் வழக்கமாக நடைபெறும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் துணை தாசில்தார் காலிப்பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் பணிகள் பாதிக்கப்படுவதோடு, கூடுதல் பொறுப்புகளை கவனிப்போருக்கு பணிச்சுமை ஏற்படுகிறது. இந்நிலையில் ஐகோர்ட்டு மதுரை கிளையின் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள 40-க்கும் மேற்பட்ட துணை தாசில்தார் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில், புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இதற்கு வட்ட தலைவர் தீபக் தலைமை தாங்கினார். இதில் வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு துணை தாசில்தார் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதேபோல புதுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு வட்ட தலைவர் வித்யா தலைமை தாங்கினார்.
தாலுகா அலுவலகங்களில் போராட்டம்
இதேபோல ஆலங்குடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு தனி தாசில்தார் யோகேஸ்வரன் தலைமையிலும், அறந்தாங்கி தாலுகா அலுவலகத்தில் வருவாய் முதுநிலை அலுவலர் செந்தில்குமார் தலைமையிலும் நடைபெற்றது.மணமேல்குடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு வட்ட தலைவர் முத்துகனி தலைமையிலும், ஆவுடையார்கோவில் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஜெயபாரதி தலைமையிலும், திருமயம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலும் நடைபெற்றது.
பணிகள் பாதிப்பு
கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு தாசில்தார் வில்லியம்மோசஸ் தலைமையிலும், விராலிமலை தாலுகா அலுவலகத்தில் கொடும்பாளூர் வருவாய் ஆய்வாளர் பாண்டி தலைமையிலும், இலுப்பூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் திருமலை தலைமையிலும், கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கலைமணி தலைமையிலும் நடைபெற்றது.
குளத்தூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு வட்ட தலைவர் அருண்குமார் தலைமை தாங்கினார். பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு வட்ட தலைவர் துரை தலைமை தாங்கினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 தாசில்தார் அலுவலகங்கள் உள்பட 13 இடங்களில் வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் வழக்கமாக நடைபெறும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.