தென்காசியில் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தினர் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தென்காசி,
தென்காசி மேலப்புலியூர் வண்ணார் சமுதாய நிர்வாகிகள் ஐவராஜா, பலவேசம், ராஜா மற்றும் ஆசாத் நகர் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தினர் நேற்று காலை தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் ஒரு கோரிக்கை மனுவை மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனாவிடம் வழங்கினர்.
அந்த மனுவில், ‘‘மத்தளம்பாறையில் உள்ள இடம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சிலர் எங்களை மிரட்டுகின்றனர். இந்த பிரச்சினையை தீர்த்து வைத்து, உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.