வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மிரட்டல்; 2 பேர் கைது

ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருபவர் அசோகன். சம்பவத்தன்று இவர் கல்லாவி அருகே கொல்லப்பட்டியில் ஊராட்சி தண்ணீர் தொட்டி அருகில் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தார்.

Update: 2020-05-23 00:54 GMT
கல்லாவி, 

 கொல்லப்பட்டி ஊராட்சி பகுதியை சேர்ந்த ஆனந்தன் (வயது 41), சூர்யா (22) ஆகிய 2 பேர் ஊராட்சி தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீரை விவசாய நிலத்திற்கு எடுத்து கொண்டிருந்தனர். 

இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் அசோகன் கேட்டார். அப்போது ஆனந்தன், சூர்யா ஆகிய 2 பேரும் அவரிடம் தகராறு செய்து அவரை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டினார்கள். 

இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் அசோகன் கல்லாவி போலீசில் புகார் செய்தார். 

அதன் பேரில் போலீசார் ஆனந்தன், சூர்யா ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்