பட்டுக்கோட்டையில் 2 மினி லாரிகளுடன், 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் வியாபாரி கைது

பட்டுக்கோட்டையில், 2 மினி லாரிகளுடன், 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வியாபாரி கைது செய்யப்பட்டார்.

Update: 2020-06-18 00:38 GMT
பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பெரியகடை தெருவில் உள்ள ஒரு அரிசி கடையில் ரேஷன் அரிசியை வாங்கி பதுக்கி வைத்து ‘பாலீஷ்’ செய்து வெளியில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அங்கு சென்ற பட்டுக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு தலைமையிலான தனிப்படை போலீசார், அரிசி கடையில் திடீர் சோதனை செய்தனர்.

அங்கு 5 டன் ரேஷன் அரிசி சுமார் 50 கிலோ எடை உடைய 110 மூட்டைகளில் பாலீஷ் செய்யப்பட்டு இரண்டு மினிலாரிகளில் ஏற்றி அடுக்கப்பட்டு தார்பாய்கள் மூலம் மூடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் 5 டன் ரேஷன் அரிசி மற்றும் இரண்டு மினிலாரிகளையும் பறிமுதல் செய்தனர்.

கைது

இது தொடர்பாக அந்த அரிசி கடையின் உரிமையாளர் பெரியசாமியை(வயது 46) போலீசார் கைது செய்தனர். அவபட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பெரியகடை தெருவில் உள்ள ஒரு அரிசி கடையில் ரேஷன் அரிசியை வாங்கி பதுக்கி வைத்து ‘பாலீஷ்’ செய்து வெளியில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அங்கு சென்ற பட்டுக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு தலைமையிலான தனிப்படை போலீசார், அரிசி கடையில் திடீர் சோதனை செய்தனர்.

அங்கு 5 டன் ரேஷன் அரிசி சுமார் 50 கிலோ எடை உடைய 110 மூட்டைகளில் பாலீஷ் செய்யப்பட்டு இரண்டு மினிலாரிகளில் ஏற்றி அடுக்கப்பட்டு தார்பாய்கள் மூலம் மூடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் 5 டன் ரேஷன் அரிசி மற்றும் இரண்டு மினிலாரிகளையும் பறிமுதல் செய்தனர்.

கைது

இது தொடர்பாக அந்த அரிசி கடையின் உரிமையாளர் பெரியசாமியை(வயது 46) போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 88 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் தஞ்சாவூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் கோகுல கண்ணனிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.ரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 88 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் தஞ்சாவூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் கோகுல கண்ணனிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்