ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்
3 சதவீத அகவிலைப்படியை வழங்கக்கோரி ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.;
சேலம்:
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று கோட்டை மைதானத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர். சங்க மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் சுப்ரமணியம் கலந்து கொண்டு பேசினார். இதில் 3 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும். ஊராட்சி செயலாளர், சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.