விவசாய கடனுக்கு வட்டி கிடையாது - பாஜக தேர்தல் அறிக்கை

விவசாய கடனுக்கு வட்டி கிடையாது என பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.;

Update:2019-04-08 12:23 IST
புதுடெல்லி

மக்களவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமித்ஷா, அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இதுகுறித்து பேசிய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பாஜக  தேர்தல் அறிக்கையின் பெயர் "சங்கல்ப் பத்ரா". பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுவார் எனகூறினார்.

தேர்தல் அறிக்கையை  பிரதமர் மோடி, தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் வெளியிட்டனர்.

48 பக்கங்கள் அடங்கிய அந்த தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ள முக்கிய  அம்சங்கள் குறித்து  மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:-

* புதிய பாரதத்தை நோக்கி பாஜகவின் தேர்தல் அறிக்கை உள்ளது. 130 கோடி மக்களுக்கும் இந்த தேர்தல் அறிக்கை திருப்தி அளிக்கும்.

* மோடி தலைமையிலான அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது.

*  மக்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்குவதில் மோடி அரசு சிறப்பாக செயல்படுகிறது.

* பாஜக தேர்தல் அறிக்கையில் 75 சிறப்பம்சங்கள் இருக்கின்றன.

* கிராமப்புற வளர்ச்சிக்கு ரூ.25 லட்சம் கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

* விவசாய கடனுக்கு வட்டி கிடையாது. 5 ஆண்டுகள் வரை விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

* தேசிய பாதுகாப்புக்கு பாஜக அரசு முன்னுரிமை தரும்.

* விவசாயிகளுக்கு வட்டியில்லா கிரடிட் கார்டு வழங்கப்படும்.

*  2022 ஆம் ஆண்டுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும்  வீடு கட்டித்தரப்படும்.

மேலும் செய்திகள்