முஸ்லீம் - இந்து காதல் ஜோடியை பிரித்த ஆன்டி-ரோமியோ படை

காதல் ஜோடியை பிரித்த ஆன்டி-ரோமியோ படை, பெண்ணை ராக்கி கட்ட வைத்தது. பையன் பெண்ணின் கால்களைத் தொட்டு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

Update: 2018-09-05 09:17 GMT
கான்பூர்

உத்தரபிரதேச மாநிலத்தில் ஈவ்-டீசிங் செய்பவர்கள், பெண்கள் பின்னால் சென்று தொல்லை கொடுப்பவர்களை பிடிக்க முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் உத்தரவின் பேரில் காவல்துறையில், ஆன்டி-ரோமியோ படை என்ற பிரிவு உருவாக்கப்பட்டது. கல்லூரிகள், பள்ளிகள், பூங்காக்கள் என பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் ஆன்டி-ரோமியோ படையினர் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். இவர்கள் பெண்களுக்கு தொல்லை தருவோரை கைது செய்து தண்டனையும் அளித்து வருகிறார்கள். இப்படையை மாநிலம் முழுவதும் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த ஆன்டி-ரோமியோ படையினர் கான்பூர் காடிட் பகுதி குட் டே பூங்கா உள்ளே ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்த ரோந்து பணியின் போது ஒரு இந்து  பெண்ணும்  முஸ்லீம் பையனும் ஜோடியாக இருந்து உள்ளனர். அவர்கள் பிடிபட்டு உள்ளனர். அவர்களுக்கு ஆன் டி- ரோமியோ படை அறிவுரை கூறி உள்ளது. இதை தொடர்ந்து   அந்த பெண்  அந்த வாலிபரின் கையில் ராக்கி கட்டி உள்ளார். அந்த பையன் பெண்ணின் கால்களைத் தொட்டு தனது நடத்தைக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

இது குறித்து ஆன் டி  ரோமியோ படையை சேர்ந்த ஆயுஷ் கரே, தனது பேஸ்புக்கில் அது குறித்து  பகிர்ந்து கொண்டார், அதனை லவ் ஜிஹாத் என்று கூறி உள்ளார்.மேலும் அவர் கூறி இருப்பதாவது:-

ஒரு முஸ்லீம் பையனும் ஒரு இந்து பெண்ணும்  ஒன்றாக இருந்தார்கள். நாங்கள் அவர்களுக்கு கட்டளையிட்டோம், அந்தப் பெண் அந்த பையன்  கையில் ராக்கி கட்டினார்.  இந்த காதல் ஜிகாத்தில்  ஈடுபட வேண்டாம் என என் இந்து சகோதரிகளுக்கு நான் வேண்டுகோள் விடுகிறேன், என கூறினார்.

மேலும் செய்திகள்