இமாச்சலபிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்

இமாச்சலபிரதேசத்தில் ரிக்டர் அளவுகோலில் 3.4 என்ற அளவிற்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. #HimachalEarthquake

Update: 2018-09-06 05:12 GMT
சிம்லா,

இமாச்சலபிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் நள்ளிரவு 12.35 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளதாக சிம்லா வானிலை மைய இயக்குனர் மன்மோகன் சிங் கூறினார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், “சம்பா மாவட்டத்தின் வடகிழக்கு பகுதியில் சுமார் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சம்பா மாவட்டத்திலும், இமாச்சலபிரதேசத்தின் பல பகுதிகளிலும் உணரப்பட்டது” எனக் கூறினார். நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இப்பகுதிகளில் மிதமான நிலநடுக்கங்கள் வழக்கமாக நிகழ்ந்து வருகிறது.

மேலும் செய்திகள்