தெலுங்கான மாநிலம் விபத்து பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு

தெலுங்கானா மாநிலத்தில் அரசு பஸ் மலைப்பாதையில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை 52 ஆக உயர்ந்து உள்ளது

Update: 2018-09-11 12:17 GMT
ஐதராபாத்

தெலுங்கானா மாநிலம் ஜெகதாலா மாவட்டம் சிவராம்பேட்டிலிருந்து ஜாகிதியால்  பஸ்  டெபோவுக்கு வந்து கொண்டிருந்தது. இன்று காலை 11.30 அம்ணியளவில்   கொண்டாகட்டு  மலைபாதையில் பஸ் வரும் போது  டிரைவரின் கட்டுபாட்டை இழந்த பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 23 பயணிகள் சம்பவ இடத்திலேயே பலியானர்கள்.

35 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அருகே உள்ள மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர் . இதில்  சிகிச்சை பலனின்று  29 பேர் பலியானார்கள். இதனை தொடர்ந்து பலி எண்ணிக்கை 52 ஆக உயர்ந்து உள்ளது.

 பலியானவர்களில் 25 பெண்கள், 8 குழந்தைகள் எனதகவல் வெளியாகி உள்ளது.

விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கி  தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் உத்தரவிட்டு உள்ளார்.

விபத்தில் பலியானவர்கள் குடுமபங்களுக்கு  ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஆறுதல் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்