தேவாலயத்திற்கு எதிரான சதிதிட்டம் கன்னியாஸ்திரியின் பலாத்கார குற்றச்சாட்டுக்கு பாதிரியார் பிராங்கோ மறுப்பு

கன்னியாஸ்திரியின் பலாத்கார குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள பாதிரியார் பிராங்கோ, தேவாலயத்திற்கு எதிரான சதிதிட்டம் என குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2018-09-11 13:30 GMT

திருவனந்தபுரம், 


கேரள மாநிலம் கோட்டயம் குருவிளங்காட்டில் உள்ள தேவாலயம் ஒன்றில் கன்னியாஸ்திரியை பாதிரியார் பிராங்கோ கடந்த 2014 முதல் 2016-ம் ஆண்டுவரையிலான காலங்களில் பலமுறை பலாத்காரம் செய்தார் என்று புகார் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாதிரியார் பிராங்கோ, கன்னியாஸ்திரியின் பலாத்கார குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார், தேவாலயத்திற்கு எதிரான சதிதிட்டம் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

பாலியல் பலாத்காரம் விவகாரத்தில் தேவாலயம் அமைதியாக இருக்கிறது என குற்றம் சாட்டும் கன்னியாஸ்திரி, இவ்விவகாரத்தில் நடவடிக்கைக்கு உதவுமாறு வாடிகனுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் பாதிரியார் பிராங்கோ பேட்டியளித்து பேசியுள்ளார். 

 “கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு எதிராக இருப்பவர்கள் அனைவரும் கன்னியாஸ்திரிகளை பயன்படுத்துகிறார்கள். இதுவும் சதிதிட்டம்தான், இப்போதைய நிலைய பலரும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகிறார்கள். கன்னியாஸ்திரிகளை முன்னாள் நிற்கவைத்து அவர்கள் அனைத்தையும் இயக்கி வருகிறார்கள். கேரள போலீசாரிடம் 9 மணி நேரங்கள் பேசினேன். முன்ஜாமீன் தாக்கல் செய்ய என்னிடம் எந்தஒரு திட்டமும் கிடையாது. அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறேன், இதில் உண்மை வெளியேவர வேண்டும்,” என கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்