போலீஸ் நிலையத்தில் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடிய குற்றவாளி
போலீஸ் நிலையத்தில் போலீசார் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடிய குற்றவாளி கைது செய்யப்பட்டான்.
போபால்
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் ராஜவத் ( வயது 25) அவரது நண்பர் மான் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டனர். இவரகள் இருவரும் பிகிந்த் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக சிறைக்கு வெளியே அமரவைக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் ராஜவத் அங்கு இருந்த 2 போலீஸாரைத் தாக்கிவிட்டு ஓடிவிட்டார், ஆனால் ஞாயிற்றுக்கிழமை இரவு பிடிபட்டார். ராஜவத்
தாக்கியதில் 2 போலீசார் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ராஜவத் போலீசாரை தாக்கும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது.
#WATCH Dramatic visuals of an undertrial prisoner viciously attacking two prison guards at a police station in Bhind on 9th September. One police personnel has been referred to Delhi for treatment, another is under treatment at a district hospital in Bhind (Source: CCTV footage) pic.twitter.com/eXEQ5eH51y
— ANI (@ANI) September 11, 2018