இம்ரான்கான் பிரதமரெல்லாம் கிடையாது, வெறும் பியூன்தான் - சுப்பிரமணியசாமி
இம்ரான்கான் பிரதமரெல்லாம் கிடையாது வெறும் பியூன்தான் என பா.ஜனதா தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.;
அகர்தாலா,
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை விமர்சனம் செய்துள்ள பா.ஜனதா தலைவர் சுப்பிரமணிய சாமி, பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இம்ரான்கான் சொல்லிக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் அங்கு ஆட்சி செய்வது எல்லாம் ஐ.எஸ்.ஐ., பயங்கரவாதிகள் மற்றும் ராணுவம்தான். இம்ரான்கான் அங்கு பிரதமரெல்லாம் கிடையாது, பாகிஸ்தான் அரசின் பியூன்களில் (உதவியாளர்கள்) ஒருவர்தான் என கூறியுள்ளார்.