பெண்ணிடம் மைக்கை ஆவேசமாக பறித்த சித்தராமையா, துப்பட்டாவும் கையோடு வந்ததால் பரபரப்பு
கேள்வி எழுப்பிய பெண்ணிடம் இருந்து கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மைக்கை பறித்த போது அந்த பெண்ணின் துப்பட்டாவும் கையோடு வந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மைசூர்,
கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவிடம் பெண் ஒருவர் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் அவர் ஆவேசமடைந்தார். வாயை மூடிக்கொண்டு கீழே உட்கார் என்று சித்தராமையா கோபத்தில் கத்திய போதும், அந்த பெண் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். இதனால் பொறுமை இழந்த சித்தராமையா, அந்த பெண் கையில் வைத்திருந்த மைக்கை வேகமாக பறித்தார். அப்போது, அந்த பெண்ணின் துப்பட்டாவும் சித்தராமையாவின் கையோடு வந்து விட்டது.
இந்த வீடியோ வெளியாகி சித்தராமையாவுக்கு எதிராக அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பெண்ணிடம் அநாகரிகமாக சித்தராமையா நடந்து கொண்டிருப்பதாக பாஜக தலைவர் ஈஸ்வரப்பா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
#WATCH Former Karnataka Chief Minister and Congress leader Siddaramaiah misbehaves with a woman at a public meeting in Mysuru. #Karnatakapic.twitter.com/MhQvUHIc3x
— ANI (@ANI) January 28, 2019