பெட்ரோல் விலையில் மாற்றமில்லை, டீசல் விலை உயர்வு
பெட்ரோல் விலையில் 3-வது நாளாக எந்த மாற்றமும் இல்லை, டீசல் விலை லிட்டருக்கு 5 காசுகள் உயர்ந்துள்ளது.;
சென்னை,
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.
அந்த வகையில் இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து மாற்றமில்லாமல் லிட்டருக்கு ரூ.75.62 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 5 காசு அதிகரித்து லிட்டருக்கு ரூ.69.83 காசுகளாகவும் உள்ளது.