மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாலை 4 மணிக்கே வாக்குப்பதிவு நிறைவு
மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாலை 4 மணிக்கே வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.;
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலத்தில் நேற்று 17 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.
இதில் 13 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள இடங்கள் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டது.
அங்கு தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 4 மணிக்கே முடிவு பெற்றது.
மற்ற பகுதிகளில் மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவுபெற்றதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.