தேசிய செய்திகள்
டெல்லியில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு

டெல்லியில் மேலும் ஒருவாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைத்து வருகிறது. டெல்லியில்   கடந்த 24 மணி நேரத்தில் 1,600 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 36 சதவிகிதமாக இருந்தது. தற்போது  தொற்று பாதிப்பு 2.5 சதவிகிதமாக குறைந்துள்ளது. 

 டெல்லியில் கடந்த ஏப்ரல்  19 ஆம் தேதி முதல் அமலில் உள்ள ஊரடங்கு நாளையுடன் முடிவுக்கு வருகிறது. நாளையுடன் ஊரடங்கு முடிவுக்கு வர உள்ள நிலையில், இன்று மேலும் ஒருவாரத்திற்கு ஊரடங்கை நீட்டித்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்தால் 31 ஆம் தேதிக்குப் பிறகு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படும் என்றார்.

தொற்று பாதிப்பு குறைந்தாலும் உயிரிழப்பு விகிதம் அதிகமாக உள்ளதால் டெல்லியில் மேலும் ஒருவாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதாக தெரிகிறது.   டெல்லியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடும் நிலவுவதால் 31 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கில் தளர்வுகள் இருக்கலாம் என்று தெரிகிறது.  


தொடர்புடைய செய்திகள்