நமது வீரர்கள் கொல்லப்படுகிறார்கள்.. நீங்கள் டி20 விளையாடுவீர்களா? ஓவைசி விமர்சனம்

இந்திய மக்களின் உயிரோடு காஷ்மீரில், பாகிஸ்தான் தினம் தினம் 20-20 விளையாடுகிறது என ஓவைசி கூறினார்.

Update: 2021-10-19 16:21 GMT
ஐதராபத், 

ஐதராபாத் எம்.பியும் எஐஎம்ஐஎம் கட்சியின் தலைவருமான அசாதுதின் ஓவைசி, பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் இந்தியா விளையாட உள்ளதை சுட்டிக்காட்டி பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து ஓவைசி கூறியதாவது:- “ பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் லடாக்கில் நமது பகுதியில் சீனா ஊடுருவியிருப்பது ஆகிய இரு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி ஒரு போதும் பேசமாட்டார். சீனா குறித்து பேச பிரதமர் மோடி பயப்படுகிறார்.   

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் நமது வீரர்கள்  9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வரும் 24 ஆம் தேதி 20 ஓவர் போட்டியில் விளையாடுமா? இந்திய மக்களின் உயிரோடு  காஷ்மீரில் பாகிஸ்தான் தினம் தினம் 20-20 விளையாடுகிறது. பீகாரை சேர்ந்த ஏழை தொழிலாளர்கள் கொல்லப்படுகின்றனர். குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. உளவுத்துறையும்  உள்துறை அமைச்சரும் என்ன செய்து கொண்டிருக்கின்றனர். மத்திய அரசின் தோல்வியையே இது காட்டுகிறது” என்றார். 

மேலும் செய்திகள்