கர்நாடகா: உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் விபத்து- 7 பேர் பலி

அலட்சியம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்மை காரணமாக குடோனின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-12-07 13:35 GMT

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் விஜயபுரா நகரில் உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையில் சுமார் 400 டன் அளவிலான மக்காச்சோளங்களை கொண்ட சேகரிப்பு தொட்டி ஒன்று திடீரென சரிந்தது.

அப்போது அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் 8 பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டர். அவர்களில் 7 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் பீகாரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அலட்சியம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்மை காரணமாக குடோனின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தொழிற்சாலை நிர்வாகம் தரப்பில் தலா 5 லட்சம் ரூபாயும், கர்நாடக அரசு தரப்பில் 2 லட்சம் ரூபாயும் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்