மும்பை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 306 அரியவகை உயிரினங்கள் பறிமுதல்
தாய்லாத்து நாட்டில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 306 அரியவகை உயிரினங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.;
மும்பை,
தாய்லாத்து நாட்டில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 306 அரியவகை உயிரினங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அரியவகை உயிரினங்கள்
மும்பை விமான நிலையத்திற்கு அரியவகை உயிரினங்கள் கடத்தி வரப்பட்டு உள்ளதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிகாரிகள் சரக்கு பார்சல் பிரிவிற்கு சென்று சோதனை போட்டனர். அப்போது பார்சலில் வெளிநாட்டை சேர்ந்த 306 அரியவகை உயிரினங்கள் உயிருடன் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட சிறியவகை ஆமைகள், 110 நத்தைகள், 30 நண்டுகள் போன்றவை அடங்கும். அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து அரியவகை உயிரினங்களை கடத்த முயன்ற நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து வனவிலக்கு குற்ற கட்டுப்பாட்டு பணியக அதிகாரிகள் கூறுயதாவது:-
சிகிச்சை
கைப்பற்றப்பட்ட உயிரினங்கள் நலனை கருத்தில் கொண்டு அவைகள் ரெஸ்கியுவ் அசோசியேஷன் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. டாக்டர் ரினா தேவ் அந்த உயிரினங்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். பிடிபட்ட உயிரினங்கள் இந்தியாவை சேர்ந்தவை அல்ல. அவற்றை இங்குள்ள காட்டுப்பகுதிகளுக்குள் விட முடியாது. எனவே அவை பிறந்த நாட்டிற்கோ அல்லது கொண்டுவரப்பட்ட நாட்டிற்கோ திரும்பி அனுப்பப்பட வேண்டி இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிலையில் அந்த உயிரினங்களுக்கு சிகிச்சை அளித்துவரும் டாக்டர் கூறுகையில், " நீண்டதூர பயணத்தின் காரணமாக கைப்பற்ற உயிரினங்கள் பாதிப்பை சந்தித்து உள்ளன. குறிப்பாக முதன்மை மற்றும் 2-ம் நிலை நோய்தொற்றுகளால் பாதிக்கப்பட்டுள்ளன"என்றார்.