கொலை வழக்கில் ஆதாரத்தை அழிக்க முயன்றவருக்கு 5 ஆண்டு கடுங்காவல்

Update:2023-03-18 00:15 IST

தானே, 

நவிமும்பை சி.பி.டி. ரெயில் நிலையம் அருகே குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆண் சடலம் ஒன்று கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ந்தேதி கண்டெடுக்கப்பட்டது. இது பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், கொலையுண்டவர் கத்ரி குமார் என்பது தெரியவந்தது. போலீசார் விசாரணை நடத்தி அவரை கொன்ற 2 பேரை பிடித்து கைது செய்தனர். இவர்கள் மீது கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட்டு அவர்களுக்கு ஏற்கனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கொலை வழக்கில் ஆதாரத்தை அழிக்க முயன்றதாக கமலேஷ் சுகுமான் மீது கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. வழக்கு விசாரணை நிறைவில் அவர் மீதான குற்றம் நிரூபணமானது. இதனை தொடர்ந்து ஆதாரத்தை அழிக்க முயன்ற கமலேஷ் சுகுமானிற்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி டாக்டர் ரச்னா டெக்ரா உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்