வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தம்பதி படுகாயம்

Update:2022-12-19 00:15 IST

புனே, 

புனே தைரி விஷ்வா பகுதியை சேர்ந்தவர் ராகுல் (வயது40). நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் வீட்டில் இருந்த சமையல் கியாஸ் சிலிண்டர் ஒன்று காலியானதால் மாற்று சிலிண்டரை மாற்றும் படி அவரது மனைவி ஆர்த்தி(37) தெரிவித்தார். இதன்படி செயல்பட்ட போது திடீரென கியாஸ் கசிவு ஏற்பட்டது. சில நிமிடங்களில் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் வீட்டில் இருந்த 2 பேரும் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்