முதல்-மந்திரி பதவியில் ஷிண்டே நீடிப்பார்- தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி
முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே நீடிப்பார் என தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.;
மும்பை,
முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே நீடிப்பார் என தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
இன்று தீர்ப்பு
மராட்டிய அரசியல் நெருக்கடி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த தீர்ப்பு ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக வரும் பட்சத்தில் அவர் முதல்-மந்திரி பதவியை இழக்க நேரிரும் என கூறப்படுகிறது. இதுகுறித்து துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
முட்டாள்களின் அரங்கம்
ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பதவிவிலகுவாரா என்ற விவாதத்தில் எந்த அர்த்தமும் இல்லை. இந்த வார்த்தையை பன்படுத்துவதற்கு வருந்துகிறேன். இதுபோன்ற கேள்விகளை எழுப்புவது முட்டாள்களின் அரங்கம். ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக தொடர்ந்து இருப்பார். அடுத்த தேர்தலில் அவரது தலைமையில் தான் போட்டியிடுவோம் என்று நான் உங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும்? இப்படிப்பட்ட எந்த விதமான ஊகங்களையும் முன்வைக்க எந்த அவசியமும் இல்லை. அவர் என்ன தவறு செய்தார்? இவ்வாறு அவர் கூறினார்.