முத்திரை தாள் விற்பனையாளரை மிரட்டி பணம் பறித்த நவநிர்மான் சேனா பிரமுகர் கைது

மும்பை ராய்காட் மாவட்டம் பென் தாலுகாவை சேர்ந்த முத்திரை தாள் விற்பனையாளரை மிரட்டி பணம் பறித்த புகாரில் நவநிர்மான் சேனா பிரமுகர் உள்பட 3 பேர் கைது;

Update:2023-07-14 01:30 IST

ராய்காட், 

ராய்காட் மாவட்ட நவநிர்மாண் சேனா கட்சியின் துணை தலைவராக இருந்து வருபவர் சந்தீப் தாக்குர். இவர் தனது கூட்டாளிகள் சாலோம் பென்கர், ரபிக் தத்வி ஆகியோருடன் பென் தாலுகாவை சேர்ந்த முத்திரைத் தாள் விற்பனையாளர் தபீப் கோட் என்பவரிடம் கடந்த ஜூன் மாதம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் தருமாறு கேட்டார். இல்லையெனில் உரிமத்தை ரத்து செய்வதாக கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். இதனால் விற்பனையாளர் முதற்கட்டத்தில் ரூ.2 லட்சத்தை அவர்களிடம் கொடுத்து உள்ளார். பின்னர் மீதி பணம் கேட்டு அவர்கள் அடிக்கடி தொந்தரவு செய்ததால் தபீப் கோட் சம்பவம் குறித்து ராய்காட் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அவர்களை கையும் களவுமாக பிடிக்க முத்திரைத்தாள் விற்பனையாளர் மூலம் சந்தீப் தாக்குரை தொடர்பு கொண்டு, மீதி பணத்தை தருவதாக கூறி குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்தனர். இதன்படி பணத்தை பெற வந்த 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மேலும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்