மும்பை,
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 25 வயது இளம்பெண், நேற்று முன்தினம் இரவு கட்டிடத்தின் 8-வது மாடியில் இருந்து கீழே குதித்து உள்ளார். இதனால் கட்டிடத்தின் முதல் மாடியில் கார் பார்க்கிங் இடத்தில் விழுந்து படுகாயமடைந்தார். சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் அவர் பலியானார். இதனை கண்ட கட்டிடத்தின் காவலாளி சம்பவம் குறித்து கட்டிடவாசிகள் மற்றும் டி.என் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் யார்? தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.