டோம்பிவிலியில் 3 வயது வளர்ப்பு மகனை கொலை செய்த பெண் கைது

டோம்பிவிலியில் 3 வயது வளர்ப்பு மகனை தாக்கி கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். இதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2022-10-01 00:15 IST

தானே, 

டோம்பிவிலியில் 3 வயது வளர்ப்பு மகனை தாக்கி கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். இதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த சிறுவன்

டோம்பிவிலி டவுண் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் ஜெய்ஸ்வால். இவர் மனைவி அமிதாதேவி (வயது28) மற்றும் 3½ வயது வளர்ப்பு மகனுடன் வசித்து வந்தார். கடந்த மாதம் 28-ந் தேதி சஞ்சய் ஜெய்ஸ்வால் வீட்டிற்கு வந்த போது வளர்ப்பு மகன் படுகாயமடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு டாக்டர் சிகிச்சை அளித்த நிலையில் உடல் நலம் மோசமானதால் கல்வாவில் உள்ள மாநகராட்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்தார். இதன்படி மகனை மீட்டு அங்கு கொண்டு சென்ற போது பரிசோதனை நடத்திய டாக்டர் சிறுவன் உயிரிழந்ததாக தெரிவித்தார்.

கொலை செய்த பெண் கைது

இது பற்றி அறிந்த திலக்நகர் போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி நடத்திய விசாரணையில் சிறுவனின் முகத்தில் சரமாரியாக தாக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சஞ்சய் ஜெய்ஸ்வாலின் மனைவி அமிதா தேவியிடம் விசாரித்தனர்.

இதில் அவர் தான் வளர்ப்பு மகனை முகத்தில் குத்து விட்டு, காலால் எட்டி உதைத்தும், வயரால் தாக்கியதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அமிதாதேவியை கைது செய்து இதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்