இறுதித் தீர்ப்பு வரும் வரை, சட்டத்தின் பார்வையில் அனைவரும் நிரபராதி தான் -அமைச்சர் ஜெயக்குமார்

சிபிஐ சோதனை குறித்த கேள்விக்கு இறுதித் தீர்ப்பு வரும் வரை, சட்டத்தின் பார்வையில் அனைவரும் நிரபராதி தான் என அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார்.

Update: 2018-09-05 12:00 GMT
சென்னை

சிபிஐ சோதனை குறித்த கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் குற்றவாளியா, இல்லையா என்பதை நீதிமன்றம்தான் இறுதித்தீர்ப்பில் சொல்லும்; அவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை.

இறுதித் தீர்ப்பு வரும் வரை, சட்டத்தின் பார்வையில் அனைவரும் நிரபராதி தான்.  திமுகவில் தற்போது அதிகார போட்டி நடைபெற்று வருகிறது இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்