பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #Perarivalan
சென்னை,
ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்க முழு அதிகாரம் உள்ளது. இது சம்பந்தமாக தமிழக அரசு தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.
இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியார்களிடம் கூறியதாவது:
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் முழுவிவரம் கிடைத்த பின்பு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நிதிக்குழு கூட்டத்தில் தமிழகத்தின் நிதி தேவை குறித்து முழுமையாக எடுத்துக்கூறப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.