குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு 20-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

குட்கா முறைகேடு வழக்கில் கைதான மாதவ ராவ் உட்பட 5 பேருக்கு செப்டம்பர் 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் அளித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #GutkhaScam

Update: 2018-09-06 12:32 GMT
சென்னை,

குட்கா முறைகேடு வழக்கில் கைதான 5 பேருக்கும் செப்-20ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குட்கா ஆலை உரிமையாளர்கள் மாதவராவ், உமா சங்கர் குப்தா, சீனிவாசராவ் உள்ளிட்ட 5  பேரையும் நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி நீலபிரசாத் உத்தரவிட்டார். 

காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மனுதாரர்கள் சார்பில் ஜாமீன் மனுகோரி மனுதாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்